விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

வானத்திலே திருவிழா

2007-10-25 by விருபா - Viruba | 2 கருத்துகள்
வானத்திலே திருவிழா
வானத்திலே திருவிழா!
வழக்கமான ஒருவிழா

இடிஇடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்!

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்!

எட்டுதிசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே!

தெருவிலெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே!

தவளை கூடப் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே!

பார்முழுதும் வீட்டிலே
பறவைகூட கூட்டிலே!

அகண்டவெளி வேடிக்கை
ஆண்டுதோறும் வாடிக்கை!

ஏறத்தாளப் பத்து ஆண்டுகள் மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்று இலட்சக் கணக்கான குழந்தைகளால் பாடப் பெற்று புகழ் பெற்ற பாடல்.

தமிழக வலைப்திவாளர்கள் பலருக்கும், தங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளியில் படித்ததில், மிகவும் விரும்பிய பாடலாக உள்ளதும் இப்பாடலே.

குழந்தைகளிற்காக பல பாடல்களைத் தந்த அழ.வள்ளியப்பா தான் இப்பாடலை எழுதியதாக இன்னமும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிஞ்சுக் குழந்தைகளாக இருந்த காலத்தில் நெஞ்சில் பதிந்த இப்பாடல் தொடர்பில் வலைப்பதிவாளர் கார்த்திகேயன் சுப்பிரமணியம் தனது வலைப்பதிவான எழுதுவது சுகாவில் 2006 இல் எழுதிய குழந்தைக் கவிஞர்...?? என்ற பதிவும் அதற்கான பின்னூட்டங்களுங்கூட இப்படலை எழுதியவர் அழ.வள்ளியப்பா என்ற எண்ணப்பாட்டையே தருகின்ற வகையில் இட்டுச் செல்கின்றன.

ஆனால் இப்பாடலை எழுதியவர் அழ.வள்ளியப்பா அல்லர்.

இப் பாடலை எழுதிய கவிஞர் முனைவர் பொன்.செல்வகணபதி ஆவார்.

கவிஞர் பொன்.செல்வகணபதி, சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1972 இல் தமது மாணவப் பருவத்தில் "செல்வணபதி கவிதைகள்" என்ற நூலினை வெளியிட்டு இலக்கிய உலகில் அறிமுகமானவர். நாமக்கல் கவிஞர், கவிஞர் கண்ணதாசன் ஆகியோராரின் பாராட்டைப் பெற்றவர். "நிழல்களை நோக்கிய போராட்டங்கள்", "கைது செய்யப்பட்ட நியாயங்கள்", "சுதந்திர சோகங்கள்", "ஞாபகப் பிசகு", "முதல் வெளிச்சம்" ஆகிய கவிதை நூல்கள் எழுதியுள்ளார். அண்மையில் "வானத்திலே திருவிழா" என்ற மழலைப் பாடல்கள் நூல் ஒன்றினைத் தந்துள்ளார்.

"வானத்திலே திருவிழா" நூலிற்கான அறிமுகவிழா 27.10.2007 மாலை 5.30 மணிக்கு சென்னை கன்னிமார நூலகத்தில், முனைவர் கம்பம் சாகுல் அமீது அவர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் முனைவர் இராம.குருநாதன், இலக்குவனார் இலக்கியப் பேரவை கவிஞர் செம்பை சேவியர், சிலம்பொலி செல்லப்பனார் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

அன்று "வானத்திலே திருவிழா" பாடலை விரும்பிப் பாடி மகிழ்ந்து இன்று பெரியவர்களாக உள்ளவர்கள், தங்களுடைய குழந்தைகளுக்காக இன்றைய "வானத்திலே திருவிழா" மழலைப் பாடல்கள் நூலினை வாங்கி ஆதரிப்பார்களாக!

அறிமுகம், எழுத்தாளர், புத்தகம்

இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For